கல்யாணம் பண்ணி வைங்க.. கலெக்டரிடம் இளைஞர் மனு

82பார்த்தது
கர்நாடக மாநிலம் கொப்பல் பகுதியில் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்து தங்களது குறைகளை கூறும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை கூறி மனு அளித்தனர். அந்த வரிசையில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு 30 வயதிற்கு மேல் ஆகிவிட்டதாகவும் யாரும் தன்னை திருமணம் செய்துகொள்ள முன்வரவில்லை என கூறி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இதனைப் பார்த்த ஆட்சியர் விழுந்து விழுந்து சிரித்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி