குழந்தை குரலை கேட்டு ஓடி வந்த அண்ணாமலை

பிரதமர் மோடி நேற்று முன்தினம் கோவையில் திறந்தவெளி வாகனம் மூலம் பொதுமக்களை சந்தித்தார். இந்நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பாஜக மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடித்தபிறகு அண்ணாமலை சாலையில் வேகமாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது, குழந்தை ஒன்று மழலை குரலில் அண்ணாமலை மாமா.. அண்ணாமலை மாமா.. என அன்போடு அழைந்தது. இதனைப் பார்த்த அண்ணாமலை ஓடி வந்து குழந்தையை தூக்கி கொஞ்சிவிட்டு சென்றார்.

நன்றி: Puthiya Thalaimurai

தொடர்புடைய செய்தி