சாலையை கடந்த நபர்.. அடித்து தூக்கிய பேருந்து (வீடியோ)

தேனி மாவட்டம் பங்களாபட்டியில் இன்று (ஜூன் 28) சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நபர் ஒருவர் சாலையில் அரசு பேருந்து வருவது தெரிந்தும் அலட்சியமாக சாலையை கடந்தார். அப்போது பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். உடனே அருகில் இருந்த மக்கள் அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்து குரித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி