நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து பிஜு ஜனதா தளம் எதிர்ப்பு

81பார்த்தது
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து பிஜு ஜனதா தளம் எதிர்ப்பு
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து மாநிலங்களவையில் பிஜு ஜனதா தளம் வலுவான எதிர்ப்பை பதிவு செய்ததாக பிஜு ஜனதா தளத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் சஸ்மித் பத்ரா தனது x பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். நீட் முறைகேடுகள் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி இரு முறை சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம் என குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில், பிஜு ஜனதா தளம் பாஜகவின் சட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், முதல்முறையாக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி