இன்று(ஜூன் 28) 10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியை விஜய் நடத்தி இருந்தார். இதில் நாங்குநேரியில் சக மாணவர்களால் சாதி வெறி தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சின்னதுரையும் கலந்து கொண்டிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய் அண்ணா முதலமைச்சர் ஆவதற்கு முன்பே கல்விக்காக இவ்வளவு செய்கிறார் என்றால், முதலமைச்சர் ஆகி விட்டால் இன்னும் நிறைய செய்வார்” என்று கூறினார். அவரின் இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.