நுழைவுத் தேர்வு குறித்து மக்கள் கருத்து கூறலாம்: உயர்மட்டக் குழு

55பார்த்தது
நுழைவுத் தேர்வு குறித்து மக்கள் கருத்து கூறலாம்: உயர்மட்டக் குழு
நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு தொடர்பாக மத்திய அரசு அமைத்த உயர்மட்டக் குழுவிடம் மக்கள் கருத்து கூறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு முறை உள்ளிட்டவற்றில் சீர்திருத்தம் மேற்கொள்ள இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், பெற்றோர், ஆசிரியர் மற்றும் கல்வி ஆர்வலரிடம் கருத்துகளை பெற்று 2 மாதங்களுக்குள் இக்குழு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது. நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தும் நிலையில் உயர்மட்டக் குழு கருத்துகளை கேட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி