கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு 65-ஆக உயர்வு

73பார்த்தது
கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு 65-ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி மற்றும் புகர்ப் பகுதிகளில் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தியதில் கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 299 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அத்தனை பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (ஜூன் 27) வரை 64 பேர் உயிரிழந்த நிலையில், கருணாபுரத்தை சேர்ந்த பெரியசாமி (40) இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. தற்போது புதுச்சேரி ஜிப்மரில் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

தொடர்புடைய செய்தி