பைக் ஸ்டண்ட் செய்யும் இளசுகள்.. அதிரடி காட்டிய போலீஸ்

61பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள திங்கள்நகர் பகுதியைச் சேர்ந்த 12 சிறுவர்கள், போக்குவரத்து விதிகளை மீறி சாலையில் பைக் ஓட்டி, அதனை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில் அந்த 12 சிறுவர்களின் பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்களுக்கு பைக் கொடுத்ததாக கூறி அவர்களது பெற்றோர்களுக்கு 11ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விசாரணையில், இன்ஸ்டாவில் அதிக லைக் வாங்குபவரே அந்த வாரத்தில் ‘தலையாக’ செயல்படுவார் என்பதற்காக இவ்வாறு செய்தது தெரியவந்துள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி