மஞ்சுவிரட்டில் ஏற்பட்ட தகராறு - அண்ணன், தம்பி வெட்டி கொலை

65பார்த்தது
மஞ்சுவிரட்டில் ஏற்பட்ட தகராறு - அண்ணன், தம்பி வெட்டி கொலை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள நாச்சிகுளத்தைச் சேர்ந்த ஜெயசூர்யா மற்றும் சுபாஷ் ஆகிய அண்ணன், தம்பி இருவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்த அவர்களது நண்பர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் தெரிவித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மஞ்சுவிரட்டு விழாவில் மாடுபிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி