ராணுவ வாகனத்தை சிறைபிடித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

73பார்த்தது
ராணுவ வாகனத்தை சிறைபிடித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை கடற்படையினரை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது, பாலத்தில் சென்று கொண்டிருந்த இந்திய ராணுவ வாகனத்தை தடுத்து நிறுத்திய மீனவர்கள், வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, கடலில் இறங்கியும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, இதுகுறித்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி