ரயில் புக்கிங்.. சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்

73பார்த்தது
ரயில் புக்கிங்.. சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு நேற்று (ஜூன் 30) தொடங்கியது. அதன்படி, அக்டோபர் 29ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு நேற்று ரயில் டிக்கெட் முன்பதிவு நடந்தது. இதில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் நெல்லை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் டிக்கெட்டுகள் 15 நிமிடத்திலேயே விற்றுத்தீர்ந்தன. அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 30ஆம் தேதி பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கவுள்ளது. தற்போது கன்னியாகுமரி, நிஜாமுதீன், அனந்தபுரி, திருச்செந்தூர் ஆகிய ரயில்களில் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி