நமக்காக உயிரைப் பணயம் வைத்த மருத்துவர்கள்! மறக்க முடியுமா?

56பார்த்தது
நமக்காக உயிரைப் பணயம் வைத்த மருத்துவர்கள்! மறக்க முடியுமா?
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் உச்சத்தில் இருந்த 2020 - 2021 காலக்கட்டத்தில் மருத்துவர்கள் செய்த சேவையை யாரும் மறுக்க முடியாது. தங்களின் உயிரையும் பணயம் வைத்து மருத்துவர்கள் ஓய்வின்றி தொடர்ச்சியாக பணியாற்றினார்கள். தங்கள் வீடுகளுக்கும் செல்ல முடியாமல், வெளியிலும் செல்ல முடியாமல் தொடர்ந்து கொரோனா வார்டில் பணியாற்றியதால் கடுமையான மன அழுத்தத்தையும், பணிச் சுமையையும் எதிர்கொண்டனர்.

மறுபுறம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களும் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளானார்கள். இப்படி மனித உருவில் கடவுளாக விளங்கும் மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவர்கள் தினத்தில் (ஜூலை 1) ஒரு ராயல் சல்யூட் அடிப்போம்.

தொடர்புடைய செய்தி