தமிழர்களுக்காக குரல் கொடுத்த இரா.சம்பந்தன் காலமானார்

63பார்த்தது
தமிழர்களுக்காக குரல் கொடுத்த இரா.சம்பந்தன் காலமானார்
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாக இரா.சம்பந்தன் (91) காலமானார். வயது மூப்பு காரணமாக சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (ஜூலை 1) காலமானார். இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த முதுபெரும் தலைவராகவும் திகழ்ந்தவர். மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் ஆவார்.

தொடர்புடைய செய்தி