தரமில்லாத உணவா? இந்த செயலி மூலம் புகாரளியுங்கள்…!

60பார்த்தது
தரமில்லாத உணவா? இந்த செயலி மூலம் புகாரளியுங்கள்…!
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தரமில்லாத உணவுகள் குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஒருவேளை நீங்கள் ஹோட்டலுக்கு செல்லும் போது தரமில்லாத உணவுகளை கண்டறிந்தால், அது குறித்து புட் சேஃப்டி கனெக்ட் (Food Safety Connect) என்கிற செல்போன் செயலி மூலமாக புகார் அளிக்கலாம். இந்த செயலி மூலமாக அனுப்பப்படும் புகார்கள் அந்தந்த மாவட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நேரடியாக சென்றடையும். பெறப்பட்ட புகார்கள் குறித்து 24 மணி நேரத்தில் அதிகாரிகள் சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற விதி இருப்பதால் உடனடியாக இதற்கு தீர்வும் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி