தேசிய மருத்துவர்கள் தினம் - அரசுக்கு ஓபிஎஸ் வைத்த கோரிக்கை

54பார்த்தது
தேசிய மருத்துவர்கள் தினம் - அரசுக்கு ஓபிஎஸ் வைத்த கோரிக்கை
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், மருத்துவரும், மே. வங்க முதல்வருமான டாக்டர் பி.சி ராய் பிறந்த தினமான ஜூலை 1, ‘தேசிய மருத்துவர்கள் தினமாக’ ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மருத்துவர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவத்தில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக வகிக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணமாக விளங்குபவர்கள் மருத்துவர்கள். அந்த வகையில் மருத்துவர்களுக்கான அனைத்து சலுகைகளையும் அரசு வழங்க வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி