மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்கலாம்!

80பார்த்தது
மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்கலாம்!
சேலம் மாவட்டத்தில் 50% மானியத்தில் 250 எண்ணிக்கையிலான நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் (ஜூலை 05)-க்குள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களை பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டை, கறிக்கோழி என பல்வேறு வகையில் லாபம் கொழிக்கும் இந்த துறையை சார்ந்தவர்கள் சுயதொழில் செய்து பொருளாதார முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி