வளர்ப்பு நாயை கொடூரமாக சித்திரவதை செய்த பெண் (வீடியோ)

60பார்த்தது
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் நடந்த இந்த கொடூர சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மருத்துவர் ஒருவரும், அவரது மனைவியும் தங்கள் நாயை தினமும் சித்திரவதை செய்து வருகின்றனர். கடுமையாக அடிப்பதுடன், கழுத்தை நெரித்தும் கொடுமை படுத்துகின்றனர். உரிமையாளரின் தாக்குதலால் நாய் வலியால் துடித்தது. இதை அவர்களுக்கு தெரியாமல் வீடியோவாக எடுத்த அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், நாயை இந்த கொடூர தம்பதிகளிடமிருந்து காப்பாற்றுமாறு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி