பெங்களூரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக உள்ள சுனில் குமார் என்பவருக்கு வாட்ஸ் அப்பில் பெண்ணொருவர் அனுப்பிய குறுந்தகவலில், "என் மாமியாருக்கு 70 வயதாகிறது. கொடுமைப்படுத்துகிறார். அவரை கொல்ல எத்தகைய மருந்து கொடுக்கலாம் என்று யோசனை கொடுங்கள்" என குறிப்பிட்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சுனில் குமார், இது குறித்து போலீஸ் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.