கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ள நிலையில் அங்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு எதற்கு நிதி? அவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுப்பது தவறானது. நிதி கொடுப்பது கள்ளச்சாராயம் அருந்துபவர்களை ஊக்குவிப்பது போல உள்ளது. அதை ஒழிக்க வேண்டுமே தவிர நிதி தரக்கூடாது” என கூறினார்.