கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சியில் 26 பேரும், சேலத்தில் 9 பேரும், புதுச்சேரியில் 3 பேரும், விழுப்புரத்தில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விஷசாராயம் அருந்தி உயிரிழந்த 20 பேரின் உடல்களை கருணாபுரத்தில் வைத்து ஒரே இடத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.