கள்ளக்குறிச்சி விவகாரம் - 20 உடல்கள் ஒரே இடத்தில் தகனம்

82பார்த்தது
கள்ளக்குறிச்சி விவகாரம் - 20 உடல்கள் ஒரே இடத்தில் தகனம்
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சியில் 26 பேரும், சேலத்தில் 9 பேரும், புதுச்சேரியில் 3 பேரும், விழுப்புரத்தில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விஷசாராயம் அருந்தி உயிரிழந்த 20 பேரின் உடல்களை கருணாபுரத்தில் வைத்து ஒரே இடத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி