கள்ளக்குறிச்சி விவகாரம் - கமல்ஹாசன் இரங்கல்!

81பார்த்தது
கள்ளக்குறிச்சி விவகாரம் - கமல்ஹாசன் இரங்கல்!
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் தனது எக்ஸ் பதிவில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ‌ ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். போதைக்கு எதிரானப் போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி