கள்ளக்குறிச்சி பிரச்சனையை விட முக்கியமானது வேறு என்ன இருக்கிறது?

73பார்த்தது
கள்ளக்குறிச்சி பிரச்சனையை விட முக்கியமானது வேறு என்ன இருக்கிறது?
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் காலை (ஜூன் 26) வழக்கம் போல் தொடங்கிய நிலையில் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவர்களை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேசலாம் என பேரவைத் தலைவர் சொன்னார்.

இருப்பினும். விதியை பின்பற்றி பேசினாலும் சபாநாயகர் அப்பாவு பேச அனுமதி தர மறுக்கிறார். கள்ளக்குறிச்சி பிரச்சனையை விட முக்கியமான பிரச்னை வேறு என்ன இருக்கிறது?. சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு அரசியல் பேசக்கூடாது. வேண்டுமென்றால் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசட்டும்” எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி