மேற்கு வங்க ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு

62பார்த்தது
மேற்கு வங்க ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
மேற்குவங்க மாவட்டம் டார்ஜிலிங் மாவட்டம் பனிஷ்தேவா பகுதியில் நின்று கொண்டிருந்த கஞ்ஜன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்களானது. இதில், சரக்கு ரயிலின் ரயிலின் சில பெட்டிகள் தரம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதே போல் விரைவு ரயிலின் 3 பெட்டிகள் தரம்புரண்டது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கையானது அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய செய்தி