ரூ.1 கோடியில் தாய்க்கு கோயில் கட்டிய மகன்கள்

59பார்த்தது
சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்காளி. இவர் 2021ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது நினைவாக முத்துக்காளியின் மூன்று மகன்கள், சொந்த ஊரில் 580 கிலோ எடையில் 5 அடிஉயரத்தில் ஐம்பொன்னால் ஆன சிலை வைத்து, கோயில் கட்டியுள்ளனர். அந்த கோயிலுக்கு கும்பாபிஷேகமும் நடத்தியுள்ளனர். இந்த கோயிலை கட்ட மொத்த ஒரு கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் தாய் மீது பாசம் வைத்திருக்கும் முத்துக்காளியின் மகன்களை பாராட்டி வருகின்றனர்.

நன்றி: ஸ்பார்க் மீடியா

தொடர்புடைய செய்தி