மேற்கு வங்க ரயில் விபத்து: பாஜக அரசை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்

50பார்த்தது
மேற்கு வங்க ரயில் விபத்து: பாஜக அரசை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்
மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “விபத்து காட்சிகள் வேதனை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனுதாபங்கள். கடந்த 10 ஆண்டுகளில், ரயில்வே துறையில் தவறான நிர்வாகத்தில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, மோடி அரசு ரயில்வே அமைச்சகத்தை எப்படி சுயவிளம்பர மேடையாக மாற்றியுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவது நமது கடமையாகும்! இந்திய ரயில்வேயை கைவிட்டதற்கு மோடி அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்வோம்.” என்றார்.

தொடர்புடைய செய்தி