நாம் தமிழர் பெண் வேட்பாளரை விரட்டிய மீனவ மக்கள்.?

573பார்த்தது
நாம் தமிழர் பெண் வேட்பாளரை விரட்டிய மீனவ மக்கள்.?
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமூவக்கரை மீனவ கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்த கிராமத்திற்கு வாக்கு சேகரிப்பதற்காக சென்ற நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள், “நானும் மீனவ பெண் தான், உங்கள் பிரச்சனை எனக்கு தெரியும்” என்று பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அவரது பேச்சை கேட்காத மக்கள் அவரை திரும்பிப் போக சொல்லி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனவே வேறு வழியில்லாமல் அங்கிருந்து காளியம்மாள் கிளம்பி சென்றார்.

தொடர்புடைய செய்தி