பல ஊர்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்

81பார்த்தது
பல ஊர்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்
ஏப்ரல் மாதம் தொடங்கி இருக்கும் நிலையில் தமிழகத்தில் பல ஊர்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே வெப்பநிலை அதிகரித்து காணப்படும் நிலையில், நேற்றைக்கு(ஏப்ரல் 04) தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 107 டிகிரி பதிவானது. சேலத்தில் 105 டிகிரியும், கரூர் பரமத்தி, திருச்சி, தருமபுரி ஆகிய இடங்களில் 104 டிகிரியும், நாமக்கல், மதுரை, வேலூர், திருத்தணி ஆகிய இடங்களில் 103 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.

தொடர்புடைய செய்தி