தமிழகத்தில் ஏப்ரல் 8 வரை வெயில் - வானிலை மையம் எச்சரிக்கை

34467பார்த்தது
தமிழகத்தில் ஏப்ரல் 8 வரை வெயில் - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்தது மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்தது. இந்நிலையில் வானிலை மையம் தமிழக மக்களுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, இன்று(ஏப்ரல் 4) முதல் ஏப்ரல் 8 வரை தமிழகத்திலும் புதுவையிலும் வெப்பநிலை 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 8ஆம்தேதி வரை 4நாட்களுக்கு வெப்பம் அதிகரித்தே காணப்படும் என்பதால் மக்கள் அதிகம் வெளியில் வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி