கோவை மாவட்டத்தில் தக்காளி, சின்ன வெங்காயம், வாழை, காய்கறிகள், விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக கோடை சீசனில் மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளில் தர்பூசணி சாகுபடி அதிகளவு செய்யப்பட்டு வருகிறது. இம்முறை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாற்று பயிராக தர்பூசணியை விவசாயிகள் சாகுபடி செய்ய தொடங்கி உள்ளனர். வழக்கமான தக்காளி சின்ன வெங்காயம், வாழை சாகுபடிகளை விடுத்து இம்முறை கோடை சீசன் பயிரான தர்பூசணி சாகுபடியில் இறங்கி உள்ளனர்.