காய்கறித் தோட்டம் அமைப்பதற்கு முதலில் எவ்வளவு அளவில் அமைக்க வேண்டும் என்று முடிவுசெய்து அதற்கேற்றவாறு நடவு செய்வது நல்லது. முதன் முதலில் தோட்டம் அமைப்பவர்கள் புதினா, கொத்தமல்லி, கீரை, மிளகாய் மற்றும் தக்காளி போன்ற செடிகளை வளர்க்கலாம். செடிகளுக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும், எவ்வளவு சூர்ய வெளிச்சம் தேவைப்படும் என்று முன்னரே தீர்மானிக்க வேண்டியது அவசியம். காய்கறி செடிகளைச் சுற்றியோ, அருகிலோ பூச்செடிகள் வளர்ப்பதைத் தவிர்க்கலாம்.