நிதின் கட்கரி பிரதமராக வேண்டும் என எழும் குரல்கள்

77பார்த்தது
நிதின் கட்கரி பிரதமராக வேண்டும் என எழும் குரல்கள்
தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவார் என்று பாஜக கூறியதும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மையமான நாக்பூரில் பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரிக்கு ஆதரவாக போர்டுகள் வைக்கப்பட்டன. கட்கரி பிரதமராக வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள், ஃபிளக்ஸ் போர்டுகள் நகர் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன. இதனால், பாஜக நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கட்கரி தொடர்ந்து மூன்றாவது முறையாக நாக்பூர் தொகுதியில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி