மின் பகிர்மான கழகத்திற்கு அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

77பார்த்தது
ராஜபாளையத்தைச் சார்ந்த ராமசுப்பு நஷ்டத்தால் மூடப்பட்ட தனது நூற்பாலையின் மின் இணைப்பைத் துண்டித்து டெபாசிட் தொகையான ஒரு லட்சத்து ஐம்பதாயித்தை திரும்பி வழங்க கோரி கடந்த ஆண்டு மின்வாரிய உதவி பொறியாளிடம் மனு அளித்தார். இது பற்றி நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஸ்ரீ வில்லிபுத்தூர் மாவட்டம் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார் ராமசுப்பு.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில் டெபாசிட் தொகை ஒரு லட்சத்து 50 ஆயிரத்தையும் இழப்பீடாக 25 ஆயிரம் வழங்க வேண்டும், வழக்கு செலவு ரூ. 5, 000 வழங்க வேண்டும் என மின் பகிர்மான கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி