சிவகாசி: ரியல் எஸ்டேட் அதிபர் குத்திக்கொலை...

81பார்த்தது
சாத்தூர் அருகே ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மர்ம நபர்களால் குத்திக் கொலை. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் அருகே மடத்துப்பட்டி விலக்கில் டீக்கடையில் முதியவர் குத்தி கொலை. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு. சாத்தூர் அருகே சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் தவிட்டுராஜ் (60) என்பவர் மடத்துப்பட்டியில் உள்ள டீக்கடையில் டீ குடிதுக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள் திடீரென சுற்றி வளைத்து சரமாரியாக கத்தியால் குத்தியதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த தவிட்டுராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குத்திய மர்ம நபர்கள் தப்பி ஓடினர். இதனை அடுத்து தவிட்டு ராஜ் உடலை கைப்பற்றிய வெம்பக்கோட்டை போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் யார்? என்ன காரணத்திற்காக தவிட்டுராஜை கொலை செய்தனர் என்பது குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி