சிவகாசி: சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கிய நபர் கைது

58பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் நாராணபுரம் ரோடு முருகன் காலனியில் சுரேஷ் என்பவரது வீட்டில் பட்டாசுகள் பதுக்கி இருப்பு இருப்பதாக சிவகாசி கிழக்கு காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் போலீஸார் சென்று சோதனை செய்தனர். மேலும் சோதனையில் பல தரப்பட்ட பட்டாசுகள் அடங்கிய 2 பெட்டிகள் இருப்பு இருந்ததை கைப்பற்றினர். மேலும் சுரேஷ் மீது சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி