சிவகாசி: குடிகார மகனை அடித்து கொன்ற தந்தை VAO விடம் சரண்..

77பார்த்தது
சிவகாசி அருகே குடிகார மகனை அடித்து கொலை செய்த தந்தையால் பரபரப்பு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே திருத்தங்கல் பொம்மை நாயக்கர் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான ராமசாமி 74, இவரது மனைவி கிருஷ்ணம்மாள் 64 மற்றும் இளைய மகன் சுப்ரமணியன் 34 திருமணம் ஆகாத இவர் மதுபழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். தினசரி காலை, பிற்பகல், இரவு என மூன்று வேளையும் மது அருந்த சுப்பிரமணியனுக்கு ரூ 600 வீட்டில் கொடுத்து வந்து உள்ளனர். மது அருந்திவிட்டு வீட்டில் தினசரி தகராறு செய்து வந்துள்ளார் என தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியன் தன் தந்தை ராமசாமியிடம் தகராறு செய்துவிட்டு மது அருந்த ரூ 200 வாங்கிச் சென்று மது அருந்திவிட்டு வீட்டின் முன்பாக சுப்பிரமணியன் விழுந்து உள்ளார். பின்னர் அவரது தாய் கிருஷ்ணம்மாள் நள்ளிரவு அவரை வீட்டிற்கு அழைத்து வந்து படுக்க வைத்துள்ளார் இதை அடுத்து செவ்வாய்க் கிழமை காலை தாய் பயிற்சிக்கு சென்ற நிலையில் வீட்டிலிருந்து ராமசாமி தினசரி மது அருந்து விட்டு வந்து தொல்லை கொடுக்கும் சுப்பிரமணியனை கட்டையால் அடித்து கொலை செய்தார். பின்னார் திருத்தங்கல் VAO குருபாக்கியம் முன்பு சரணடைந்தார். மேலும் திருத்தங்கல் காவல் நிலையத்தில் VAO குருபாக்கியம் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி