சிவகாசி: தடை செய்யப்பட்ட சரவெடிகள் அழிப்பு...

60பார்த்தது
சிவகாசி அருகே உள்ள அனுப்பங்குளத்தில் சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் இருந்த சுமார் ரூ. 4 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகள் அழிப்பு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே அனுப்பங்குளம் கிராமத்தில் அருணாச்சலம் என்பவருக்கு சொந்தமான பெசோ உரிமம் பெற்ற வேம்பார் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் கடந்த மே மாதம் 28ம் தேதி தீப்பெட்டி மற்றும் பட்டாசு தனி வட்டாட்சியர் திருப்பதி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்த போது பட்டாசு குடோனில் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட 1000, 2000, 5000 வாலா சரவெடிகள் உள்ளிட்ட பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர். மேலும் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தனர். குடோனுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி பட்டாசு ஆலை உரிமையாளர் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதில் குடோனில் உள்ள தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகளை அழித்துவிட்டு குடோனுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுமாறு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று தனி வட்டாட்சியர் திருப்பதி தலைமையிலான அதிகாரிகள் குடோனில் 32 பெட்டிகளில் இருந்த சரவெடி பட்டாசுகளை எடுத்து, குழியில் போட்டு தண்ணீர் ஊற்றி அளித்த பின் குடோன் சாவியை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி