மகாராஷ்டிராவில் ஷேகான் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் நேற்று (செப்., 06) தற்கொலை செய்து கொண்டார். ரயில் வரும் போது தண்டவாளத்தில் இறங்கி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இறந்தவர் அட்டாலி பகுதியை சேர்ந்த அர்ச்சனா என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.