திருமணம் முடிந்த அடுத்த நொடி மணமகனை தூக்கிய போலீசார்

74பார்த்தது
கொடைக்கானல் மேல்மலை கிராமமான பழம்புத்தூரில் முத்தையா என்பவருக்கும், அருகில் உள்ள தோட்டத்தினருக்கும் இடையே நில பிரச்சனை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் முத்தையாவின் மூத்த மகன் ராமு மர்ம நபர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து முத்தையா கொடுத்த புகாரின் பேரில், ராமுவை கொலை செய்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஆறாவது நபரான சதீஷ் குமாருக்கு நேற்று பழனி பாப்பநாயக்கன்பட்டியில் திருமணம் நடந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் சரணடைந்தார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி