சிவகாசி: பட்டாசு விற்பனையாளர்கள் விழிப்புணர்வு கூட்டம்.....

70பார்த்தது
சிவகாசி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சிவகாசி நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பது, போதை பொருட்களின் பயன்பாட்டை தடுப்பது, பாதுகாப்பான முறையில் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை மேற்கொள்வது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பட்டாசு விற்பனையாளர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். தற்போது மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு ஆலோசனைகளை பொதுமக்கள் டிஎஸ்பி இடம் வழங்கினர் அதேபோல பள்ளி கல்லூரி மாணவர்களிடம் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்தும், பெற்றோர் கவனமாக தங்களது பிள்ளைகளை பார்ப்பது குறித்தும் டிஎஸ்பி பொது மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி