சிவகாசி: மேயர் தலைமையில் ஆலோசனை கூட்டம்...

50பார்த்தது
சிவகாசி மேயர் சங்கீதா தலைமையில் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து மாநகராட்சியில் மேயர் சங்கீதா தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா தலைமையில் வடகிழக்கு பருவமழை குறித்து ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர் நல அலுவலர் சரோஜா, மாநகர பொறியாளர் ராமசாமி, உதவி செயற்பொறியாளர், சுகாதார அலுவலர்கள் சுரேஸ், திருப்பதி, சுகாதார ஆய்வாளர் சித்திக் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில், சிவகாசி மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகின்றது என்றும் மழைக்காலங்களில் நீர் நிலைகளில் பொதுமக்கள் பாதுகாப்பின்றி செல்லாமல் இருப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், அதிகளவு மழை பெய்யும் காலங்களில் பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் மீட்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், மேலும் நகருக்குள் தண்ணீர் தேங்காதவாறு துரித நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்றும் மேயர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி