சிவகாசி: பஸ் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்...

85பார்த்தது
சிவகாசி அருகே கிராமப்புற பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகள் நின்று செல்ல வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலை சாட்சியார்புரம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி நாடைபெற்று வருவதால்
சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வாகன போக்குவரத்து சிவகாசியிலிருந்து விளாம்பட்டி செல்லும் சாலை மார்க்கமாக ஆனையூர், அய்யம்பட்டி, லட்சுமியாபுரம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளின் வழியே மாற்றுப்பாதையில் செல்கிறது. கிராமங்கள் வழியே செல்லும் அனைத்து வாகனங்களும் அதி வேகமாக செல்வதாகவும் மற்றும் நகர் பேருந்துகள் உள்பட அனைத்து பேருந்துகளும் கிராமங்களின் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதில்லை என குற்றம் சாட்டி கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மறியல் செய்தவர்களுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நகர் பேருந்துகள் மட்டும் அனைத்து கிராமங்களின் பேருந்து நிறுத்தத்திலும் நின்று செல்லவும், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததின் பேரில், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த மறியலை கிராம மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி