சிவகாசி: சட்டவிரோதமாக மதுபாட்டிகள் விற்பனை செய்தவர் கைது..

75பார்த்தது
சிவகாசி முருகன் காலனியில் வீட்டில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்தவர் கைது. 130 மது பாட்டில்கள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதமாக மது விற்பனை குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிவகாசி முருகன் காலனியில் வீட்டில் வைத்து சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை நடப்பதாக ரகசிய தகவல் காவல் நிலையத்திற்கு கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்பி பாஸ்கர் உத்தரவின் படி சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர். சந்திரன் மற்றும் சார்பு ஆய்வாளர் காசியம்மாள் தலைமையிலான போலீசார் முருகன் காலனியில் சோதனை செய்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜெயபிரபு(42) என்பவரது வீட்டில் சோதனை செய்த போது130 மது பாட்டில்கள் சட்டவிரோதமாக இருந்தது தெரிய வந்தது. பின்னர் மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், ஜெயபிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி