சிவகாசி: அட்டை குழாய் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

80பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவர் அப்பகுதியில் உள்ள கவிதா நகரில் லட்சுமி வெடிக்கான அட்டை குழாய் கம்பெனியை சொந்தமாக நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று (செப்.15) அதிகாலை திடீரென குழாய் கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக அகுகில் இருந்தவர்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி தீயணைப்பு படையினர் கம்பெனியில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.

மேலும் அதிகாலை நடந்த விபத்தால் ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து சிவகாசி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி