இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பௌர்ணமி தின விளக்கு பூஜை

71பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆண்டு முழுவதும் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். சங்கரன்கோவில் தென்காசி தூத்துக்குடி திருநெல்வேலி கருவலம், புளியங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிக்க கூட்டம் கூட்டமாக பாதரையாத்திரையாகவும் அம்மனை தரிசனம் செய்ய வந்தனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அக்னி செட்டி ஆயிரம்கண் பானை, மா விளக்கு உள்ளிட்ட தங்களது வேண்டுதல், மற்றும் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
மேலும் இக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இன்று பங்குனிமாதம் பௌர்ணமி தினம் என்பதால் இன்று திருக்கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி திருவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பெண்கள் அம்மனுக்கு விளக்கு ஏற்றி அம்மன் பாடல்கள் பாடி பக்தியுடன் பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி