சாத்தூர்: சட்டவிரோதமாக பட்டாசு பதுக்கிய பெண் கைது...

70பார்த்தது
சாத்துார் அருகே தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கிய பெண் கைது. பட்டாசுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் அருகே உள்ள அண்ணா நகர் அரசு மதுபான கடையின் பின்புறமுள்ள கிருஷ்ண தேவி என்பவருக்கு சொந்தமான
காலிமனையில் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பல தரப்பட்ட பட்டாசுகள் இருப்பு இருப்பதாக சாத்துார் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன. தகவலின் பேரில் சம்பவ இடத்தில் நேரில் சென்ற சார்பு ஆய்வாளர் முருகேஸ்வரன் மற்றும் போலீஸார் சோதனை செய்தனர். மேலும் சோதனையில் பல தரப்பட்ட பட்டாசுகள் அடங்கிய கிப்ட் பாக்ஸ்கள் மற்றும் சரவெடிகள் பதுக்கி இருந்ததை பறிமுதல் செய்தனர். மேலும் சாத்துார் காவல் நிலையத்தில் கிருஷ்ண தேவி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி