சாத்தூர்: கல்லூரி மாணவர்கள் விபரீத பேருந்து மரண பயணம்...

83பார்த்தது
சாத்தூர் அருகே பேருந்து மேற்கூரை மற்றும் ஜன்னல்களில் ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவர்கள் பயணிக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் பேருந்து பயணத்தை நாடியே உள்ளனர். கிராமப்புறங்களுக்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் மிகுந்த சிரமங்களை சந்தித்து நாள்தோறும் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் ஏழாயிரம்பண்ணையிலிருந்து சாத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் போதிய இடம் இல்லாததால் பேருந்தின் படிக்கட்டு, ஜன்னல்கள் மற்றும் மேற்கூரையில் அமர்ந்து மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கிராமத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் கல்லூரிக்கு செல்லும் நேரத்தில் வரும் ஒரு சில பேருந்துகளில் இது போன்ற ஆபத்தான நிலையில் பயணிக்க வேண்டிய அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதாக கல்லூரி மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி