பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.5.64 கோடி

67பார்த்தது
பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.5.64 கோடி
திண்டுக்கல் மாவட்டம் முருகன் மாநாடு, விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை காரணமாக குவிந்த பக்தர்களின் கூட்டத்தினால், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் 40 நாள்களில் நிரம்பின. இதையடுத்து, இரண்டு நாட்கள் உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைக் கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. இரு நாள்கள் எண்ணிக்கை முடிவில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.5 கோடியே 64 லட்சத்து 69 ஆயிரத்து 457 கிடைத்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி