விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கன்னக்குடும்பன்பட்டியை சேர்ந்தவர் கணேசன்(60), இவர் இருசக்கர வாகனத்தில் வெம்பக்கோட்டையில் இருந்து கன்னகுடும்பன்பட்டிக்கு சென்ற போது தனியார் அட்டை கம்பெனி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கிழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலே பலியானார். இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செயது வருகின்றனர்.