நடுரோட்டில் இளம்பெண்ணை கட்டிப்பிடித்த இளைஞர்.. வெளுத்த மக்கள்

81பார்த்தது
நடுரோட்டில் இளம்பெண்ணை கட்டிப்பிடித்த இளைஞர்.. வெளுத்த மக்கள்
திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே பேருந்தில் இருந்து இறங்கிக் கொண்டு இருந்த இளம்பெண்ணை, வடமாநில இளைஞர் ஒருவரும் ஓடிச்சென்று கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் இளைஞரை சரமாரியாக தாக்கி போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி