இராஜபாளையம்: கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது..

72பார்த்தது
இராஜபாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையத்திலிருந்து தென்காசி செல்லும் சாலையில் தெற்கு வெங்காநல்லூர் முக்கு அருகே தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முத்துகுமரன் தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சோதனை செய்தனர். அப்போது சோதனையில் சட்டை பையில் மறைத்து வைத்திருந்த பொட்டலங்களை ஆய்வு செய்த போது அதில் கஞ்சா இருப்பதை கண்டறிப்பட்டன. பின்னர் விசாரணையில் அவர் இராஜபாளையம் அம்பலபுலி பஜார் பகுதியை சேர்ந்த சண்முகராஜ் (24) என தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து, தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி